ஈரோடு

மாநில அளவிலான போட்டியில் குமுதா பள்ளி சிறப்பிடம்

DIN


மாநில அளவிலான யோகா போட்டியில் முதலிடம் பெற்ற குமுதா பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. 
கோவை கணபதியில் உள்ள ஓசோன் யோக மையத்தில் மாநில அளவிலான யோகா போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இப் போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். 
இந்தப் போட்டியில் நம்பியூர் குமுதா பள்ளியைச் சேர்ந்த 23 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர். இதில் முதலிடம் பெற்ற 9 மாணவ, மாணவிகள் அந்தமான் நிக்கோபர் தீவில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டிக்கும், 3 மாணவ, மாணவிகள் சிங்கப்பூரில் நடைபெற உள்ள சர்வதேச அளவிலான போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளனர். 
தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு தேர்வாகி உள்ள மாணவ, மாணவிகளை பள்ளித் தாளாளர் கே.ஏ.ஜனகரத்தினம், இணைத் தாளாளர் சுகந்தி, செயலர் டாக்டர் அரவிந்தன், இணைச் செயலர் டாக்டர் மாலினி, முதல்வர் மஞ்சுளா, தலைமையாசிரியை வசந்தி உள்ளிட்டோர் பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

திருவட்டாறு அருகே தடுப்பணையில் மூழ்கி பொறியியல் மாணவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT