ஈரோடு

மாவட்ட அளவிலான செஸ் போட்டி

DIN

மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த 250 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
 ஈரோடு பிரவின் செஸ் அகாதெமி சார்பில் 4 ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவியருக்கான செஸ் போட்டிகள் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 17 பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 250 பேர் கலந்து கொண்டனர். 
இதில் 7, 10, 13, 25 ஆகிய வயதுக்குள்பட்ட பிரிவுகளில் 5 சுற்றுகளாகப் போட்டிகள் நடந்தன. ஐந்து சுற்றுகளில் அதிகப் புள்ளிகள் எடுத்த ஒவ்வொரு பிரிவிலும் 30 பேர் என நான்கு பிரிவுகளில் மொத்தம் 122 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, மாவட்ட செஸ் சர்க்கிள் செயலாளர் ரமேஷ் சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் போட்டி ஒருங்கிணைப்பாளர் பிரவின் குமார் உள்ளிட்ட அமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.            

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT