ஈரோடு

விவேகானந்தா பள்ளியில் கிருஷ்ண ஜயந்தி

DIN

பெருந்துறை ஸ்ரீ சுவாமி விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ண ஜயந்தி விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. 
விழாவுக்கு, பள்ளித் தலைவர் டி.சி.கே.சின்னசாமி தலைமை வகித்தார். தாளாளர் எல்.சென்னியப்பன் முன்னிலை வகித்தார். முதல்வர் கே.எஸ்.சுப்பிரமணியன் வரவேற்றார். விழாவையொட்டி, பள்ளிக் குழந்தைகள் கிருஷ்ணன், ராதை வேடம் அணிந்து வந்திருந்தனர்.  கிருஷ்ண ஜயந்தியைப் பற்றி குழந்தைகள், தங்கள் கருத்துகளை மழலை மொழியில் எடுத்துரைத்தனர். குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. 
இதில், பள்ளியின் பொருளாளர் சி.ஆர்.மாணிக்கமூர்த்தி, பள்ளி இணைச் செயலாளர்கள் கலாதேவி, கீதா, ஆசிரியர்கள், பெற்றோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT