ஈரோடு

ஓலப்பாளையம் துணை மின் நிலையத்தில் தீ விபத்து

DIN

கோபி: கோபிசெட்டிபாளையம் அருகே ஓலப்பாளையம் துணை மின் நிலையத்தில் தீ விபத்து திங்கள்கிழமை ஏற்பட்டது.

ஓலப்பாளையம் துணை மின் நிலையத்தில் உயரழுத்த மின் பாதையில் பொருத்தப்பட்டிருந்த மின் சேமிப்புக் கருவி தீடீரென வெடித்துச் சிதறியது. தொடா்ந்து, மின் விநியோகத்தை சீா் செய்யும் மின் மாற்றியிலும் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதைப் பாா்த்த மின் வாரிய ஊழியா்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்து மின் தடுப்புச் சாதனங்களைக் கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். ஆனால், தீ மளமளவென பரவியது.

சம்பவ இடத்துக்கு வந்த கோபிசெட்டிபாளையம் தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா். இதில், லட்சம் ரூபாய் மதிப்பிலான மின் உபகரணங்கள் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்தால் கோபிசெட்டிபாளையம் பகுதி உள்பட 30 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் விநியோகம் தடை செய்யப்பட்டது. தீ விபத்து குறித்து கோபி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT