ஈரோடு

புதிய தார் சாலை அமைக்கும் பணி

DIN


காசிபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட காந்தி நகர், இந்திரா நகர், ஓடக்காடு உள்பட 8க்கும் மேற்பட்ட பகுதிகளில் புதிய தார் சாலைகள் அமைக்கும் பணி, சாலை மேம்பாட்டுப் பணிகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
காசிபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ. 2.62 கோடி மதிப்பீட்டில் புதிதாக தார் சாலைகள் அமைக்கும் பணி, சாலை  மேம்பாட்டுப் பணிகளை  அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் துவங்கி வைத்தார்.
 மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன்,  நம்பியூர் ஒன்றிய அதிமுக செயலாளர் தம்பி சுப்பிரமணியம், துறை அதிகாரிகள், அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை நீரில் சிக்கிய பேருந்து: ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அறிவுறுத்தல்!

பாஜக வெற்றி பெற்றால் 2025 முதல் அமித் ஷாவே பிரதமர்: கேஜரிவால்

நாகை-இலங்கை கப்பல் சேவை மீண்டும் மாற்றம்!

புதிய மக்களவையில் முஸ்லிம்கள் எத்தனை பேர்?

போஸ்டர் ஒட்டுவதில் தகராறு: பாஜக தொண்டர் கொலை!

SCROLL FOR NEXT