ஈரோடு

கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில் ஆடை அலங்கார அணிவகுப்பு

DIN

ஈரோடு கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில் ஆடை வடிவமைப்பு மற்றும் அலங்காரத் துறை சார்பில் "ஃபேஷன் காலா 2019' என்ற ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.  
இந்நிகழ்ச்சியை கல்லூரித் தாளாளர் எ.கே. இளங்கோ, முதல்வர் என்.ராமன் ஆகியோர் தலைமை வகித்து தொடங்கிவைத்தனர். துறைத் தலைவர் எஸ்.மஞ்சுளா வரவேற்றார். 
பாரம்பரியம், கலாச்சாரம், கருப்பு- வெள்ளை ஆடைகள், குழந்தைகள் வன்கொடுமைத் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ, மாணவிகள் ஆடைகளை வடிவமைத்து, அணிந்து வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.  இதில் இளங்கலை, முதுகலை மாணவ, மாணவிகள் 75 பேர் பங்கேற்றனர். 
நிகழ்ச்சியில் ஈரோடு பரணி சில்க்ஸ் உரிமையாளர் ஆர்.நிஷா, ஈரோடு மோட்டிப் டிசைன் பொட்டிக் நிறுவனர் எஸ்.எம்.குருராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT