ஈரோடு

ஆதர்ஷ் மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா

DIN


அந்தியூர் ஆதர்ஷ் வித்யாலயா மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. 
விழாவுக்கு, ஐடியல், ஆதர்ஷ் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் கே.சிவலிங்கம் தலைமை வகித்தார். ஆதர்ஷ் கல்வி நிறுவனங்களின் செயலாளர் எஸ்.செல்வமணி முன்னிலை வகித்தார். 
கல்லூரி முதல்வர் வி.பிரபாகரன், பொங்கல் பண்டிகையின் முக்கியத்துவம், தமிழர்களின் பாரம்பரியம், கலை, கலாசாரம் குறித்து விளக்கிப் பேசினார். 
தொடர்ந்து, துறை வாரியாக மாணவியர் பொங்கல் வைத்து சூரியனை வழிபட்டனர். பாரம்பரிய நடனங்கள், உரி அடித்தல், கும்மி அடித்தல், நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுதல் என உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இதையடுத்து, அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

தாக்கப்பட்ட மாணவர்... +2 தேர்வில் அசத்திய நான்குனேரி சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

SCROLL FOR NEXT