ஈரோடு

பெருந்துறை அருகேதீ விபத்தில்  பெண் சாவு

DIN


பெருந்துறை அருகே நேரிட்ட தீ விபத்தில் பலத்த காயமடைந்த பெண் உயிரிழந்தார். 
பெருந்துறையை அடுத்த பட்டகாரன்பாளையம், மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த குப்புசாமி மனைவி சரஸ்வதி (50). இவர், திருமணமாகி 2 மாதத்தில் தனது கணவரைப் பிரிந்து வந்து தனது அக்கா கோவிந்தம்மாளுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், அவர் வீட்டில் குளிப்பதற்காக ஜனவரி 5 ஆம் தேதி தண்ணீர் காயவைத்துள்ளார். அப்போது, அவரது சேலையில் தீப்பிடித்துக் கொண்டது. 
இதில், பலத்த காயமடைந்த சரஸ்வதி ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, சரஸ்வதி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
இதுகுறித்து, பெருந்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT