மின் கம்பம் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞர் சாவு
கொடுமுடி, தேவம்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் நிலைதடுமாறி மின் கம்பம் மீது மோதியதில் உயிரிழந்தார்.
கொடுமுடி, தேவம்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் நிலைதடுமாறி மின் கம்பம் மீது மோதியதில் உயிரிழந்தார்.
ஆராம்பாளையத்தைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (26). எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்தார். இவர், தேவம்பாளையத்தில் இருந்து ஆராம்பாளையம் நோக்கி புதன்கிழமை அதிகாலை 3 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.அப்போது, நிலைதடுமாறி சாலையின் ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதியதில் தலை, முகம் ஆகிய இடங்களில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே தினேஷ்குமார் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து, மலையம்பாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.