ஈரோடு

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த  மாணவர் பலத்த காயம்

DIN

ஈரோடு அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த மாணவர் பலத்த காயமடைந்தார். 
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் ராஜன் தெருவைச் சேர்ந்தவர் அஜய் (19). பிளஸ் 2 முடித்துள்ள இவர் கல்லூரி படிப்பில் சேர இருந்தார். இந்நிலையில் அஜய், திருப்பூரில் உள்ள சகோதரி வீட்டுக்கு செல்வதற்காக சேரன் விரைவு ரயில் மூலம் புதன்கிழமை இரவு வந்து கொண்டிருந்தார்.  
 அந்த ரயில் ஈரோடு, தொட்டிபாளையம் ரயில் நிலையத்தைக் கடந்து வியாழக்கிழமை காலை சென்று கொண்டிருந்தது.  அப்போது ரயில் படிக்கட்டில் அமர்ந்து  பயணம் செய்த அஜய் எதிர்பாராதவிதமாக ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவர் பலத்த காயமடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஈரோடு ரயில்வே போலீஸார் அங்கு சென்று அஜயை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இதுகுறித்து ஈரோடு ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலஸ்தீனத்தில் தூதரகம்: கொலம்பியா அறிவிப்பு!

உங்கள் ராசி என்ன? இன்றைய தினப்பலன்!

மிகச் சிறப்பான நாள் இன்று!

மது அருந்துவோரை விட கஞ்சா புகைப்பவர்கள் எண்ணிக்கை அதிகம்: ஆய்வில் தகவல்!

வெம்பக்கோட்டை அருகே வைகாசி விசாகத் திருவிழா

SCROLL FOR NEXT