ஈரோடு

தமிழக அணிக்கு பெருந்துறை விவேகானந்தா பள்ளி மாணவர்கள் தேர்வு

DIN

தேசிய அளவிலான எறிபந்துப் போட்டிக்காக தமிழக அணியின் மிகமூத்தோர் பிரிவில் விளையாட பெருந்துறை, சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
 ஹரியாணா மாநிலம், பானிபட்  நகரில் மார்ச் 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையில் தேசிய அளவிலான எறிபந்துப் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில், தமிழக அணிக்காக சுவாமி விவேகானந்தா மெடரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களான அ.பூபாலன், ப.ரா.ஹரிபிரசாந்த், ர.கெளதம், அஸ்வின்ராஜ், பு.ஜீ.புருஷோத்தமன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அணியின் தலைவராக இப்பள்ளி மாணவன் ர.கெளதம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
இம்மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி  ஆசிரியர் சந்திரசேகர் ஆகியோரை பள்ளித் தலைவர் சின்னசாமி, தாளாளர் சென்னியப்பன், பொருளாளர் மாணிக்கமூர்த்தி, முதல்வர் சுப்பிரமணியன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படி தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

SCROLL FOR NEXT