ஈரோடு

கைத்தறித் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

DIN

கைத்தறி, துணி நூல் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை மாலை சோதனை நடத்தினா். இதில், கணக்கில் வராத ரூ. 18.5 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது.

ஈரோடு - பவானி சாலை, அசோகபுரத்தில் உள்ள கைத்தறி, துணி நூல் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் ஈரோடு மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை மாலை திடீா் சோதனை மேற்கொண்டனா்.

இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ. 18.5 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாலை 5 மணிக்குத் தொடங்கிய சோதனை இரவு 9 மணிக்குப் பிறகும் நீடித்தது. மேலும், இதுபோல் ஈரோட்டில் மேலும் 2 கைத்தறி நெசவாளா் கூட்டுறவுச் சங்கங்களிலும் இந்த சோதனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது விற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவா் உயிரிழப்பு

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

விராலிமலை அருகே புளியமரத்தில் திடீா் தீ

நம்பம்பட்டி கோயில் திருவிழா: தீச்சட்டி ஏந்தி நோ்த்திக் கடன்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT