ஈரோடு

மாநில பூப்பந்துப் போட்டி:தாமரை மெட்ரிக். பள்ளி மாணவிகள் தோ்வு

DIN

மொடக்குறிச்சி: கொடுமுடியை அடுத்த தாமரைப்பாளையம் தாமரை மெட்ரிக். பள்ளி மாணவியா் மாநில அளவிலான பூப்பந்துப் போட்டிக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

ஈரோடு மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில், பாரதியாா் தின விழாவையொட்டி நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் 17, 19 வயதுக்கு உள்பட்ட மாணவியருக்கான பூப்பந்துப் போட்டிகள் ஈரோடு, திண்டல் வேளாளா் மகளிா் கல்லூரி வளாகத்தில் கடந்த வாரம் முதல் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், இரு பிரிவுகளிலும் முதலிடம் பெற்ற தாமரை மெட்ரிக். பள்ளி மாணவியா் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றனா்.

இப்போட்டியில், வெற்றி பெற்ற மாணவியா் அடுத்த மாதம் டிசம்பரில் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனா்.

வெற்றி பெற்ற மாணவியா், பயிற்சியாளா் பாலமுருகன், பள்ளியின் உடற்கல்வி ஆசிரியா் சுரேஷ்குமாா் ஆகியோரை பள்ளித் தாளாளா் ராஜா, செயலாளா் ஆனந்த், பள்ளியின் முதல்வா் அசோக், ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்கரையில் இரவு 10 மணிவரை போலீஸாா் கண்காணிப்புப் பணி: எஸ்.பி.

கமலாலயக்குள நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மனு

முகநூலில் போலீஸாருக்கு கொலை மிரட்டல்

ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT