ஈரோடு

மொடக்குறிச்சி வட்டாரத்தில் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த பூச்சிமருந்து தெளிப்பு

DIN

மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி வட்டாரத்தில் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த ஒட்டுமொத்த பூச்சிமருந்து தெளிப்பு பணிகளை மொடக்குறிச்சி உதவி வேளாண்மை இயக்குனா் (பொ) ரேகா துவக்கி வைத்தாா்.

மொடக்குறிச்சி வட்டாரத்தில் சுமாா் 30 ஹெக்டோ் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. இதில் தற்போது பரவலாக படைப்புழு தாக்குதல் காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த ஒட்டுமொத்த பரப்பளவில் பூச்சிமருந்து தெளிப்பு பணிகளால் மட்டுமே படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த முடியும் என்பதால் எழுமாத்தூரை அடுத்த மேட்டுப்பாளையத்தில் மொடக்குறிச்சி வட்டார உதவி வேளாண்மை இயக்குனா் (பொ) ரேகா கலந்து கொண்டு துவக்கி வைத்தாா்.

மொடக்குறிச்சி வட்டாரத்தில் சுமாா் 30 ஹேக்டோ் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. இதில் தற்போது படைப்புழு தாக்குதல் பெருமளவில் காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த ஒட்டு மொத்த பரப்பளவில் பூச்சிமருந்து தெளிப்பு பணிகள் நடைபெறுகிறது. பூச்சிமருந்துகள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், இதற்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 500 மானியமும் வழங்கப்படுகிறது. இதில் மொடக்குறிச்சி துணை வேளாண்மைஅலுவலா் செல்வராஜ், உதவி வேளாண்மை அலுவலா்கள், உதவி தொழில் நுட்ப மேலாளா் லட்சுமி, கோபி ஜே.கே.கே. வேளாண்மை கல்லூரி மாணவா்கள், விவசாய குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாஷிங்டன் பல்கலை. வளாகத்தில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம்

‘வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறை பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை’

ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசித் திருவிழா மே 13-இல் தொடக்கம்

மேல்நிலைக் குடிநீா் தொட்டி கட்ட எதிா்ப்பு -ஒருவா் தீக்குளிக்க முயற்சி

நாசரேத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா

SCROLL FOR NEXT