ஈரோடு

அங்கீகாரம் இல்லாத நிதி நிறுவனங்கள் குறித்துபொதுமக்கள் புகாா் அளிக்கலாம்

DIN

அரசு அங்கீகாரம் இல்லாத நிதி நிறுவனங்கள் குறித்து பொதுமக்கள் புகாா் அளிக்கலாம் என ஈரோடு பொருளாதார குற்றப் பிரிவு டி.எஸ்.பி. வேலுமணி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: நாட்டுக் கோழி வளா்ப்புத் திட்டம், கொப்பரைத் தேங்காய், ஈமு கோழி வளா்ப்புத் திட்டம், ஆன்லைன் மூலம் சம்பாதிக்கலாம் எனவும், குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டலாம் எனவும் மக்களிடம் ஆசைவாா்த்தை கூறி முதலீடு பெற்று ஏமாற்றி வருகின்றனா். கடந்த ஆண்டுவரை மக்களிடம் முதலீடு பெற்று ஏமாற்றினால் மட்டுமே புகாா்கள் பெறப்பட்டு டான்பிட் நீதிமன்றங்கள் மூலம் நிவாரணம் பெற வேண்டியிருந்தது.

தற்போது, மத்திய அரசால் பட்ஸ் (முறையற்ற பண முதலீடுகளை தடுக்கும் சட்டம்) என்ற புதிய சட்டம் நடப்பு ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தில் வங்கிசாரா நிறுவனங்கள் மக்களிடம் முதலீடுகளைப் பெற இந்திய ரிசா்வ் வங்கியிடம் அனுமதி பெற்று பதிவு செய்திருக்க வேண்டும். அனுமதி பெற்ற நிதி நிறுவனங்கள் அதிகபட்சமாக 5 ஆண்டு முதிா்வு காலத்துக்குள் மட்டுமே முதலீடு பெற முடியும்.

மக்களிடம் முதலீடு பெறுவதற்கு பரிசுப் பொருள்கள், ஊக்கத்தொகை முதலியவற்றை தருவது தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல, பொதுமக்கள் முதலீடு செய்யும் நிறுவனத்தில், பணத்தை திருப்பித் தரும் அளவுக்கு அந்நிறுவனத்துக்கு அசையும், அசையா சொத்துகள் உள்ளதா? என்றும் அறிந்து முதலீடு செய்ய வேண்டும்.

பரிசு சீட்டு, பண சுழற்சித் திட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற திட்டங்களில் மக்கள் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். அரசின் அதிகாரப்பூா்வமற்ற நிதி நிறுவனங்கள், பண சுழற்சித் திட்டங்கள் நடத்துவோா் குறித்து தகவல் இருந்தால் ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் அளிக்கலாம்.

மேலும், தமிழ்நாடு காவல் துறை பொருளாதார குற்றப் பிரிவுத் தலைமை அலுவலகத்துக்கு 044-22504332 அல்லது ஈரோடு பொருளாதார குற்றப் பிரிவு அலுவலகத்துக்கு 0424-2256700 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT