ஈரோடு

10 வருவாய் வட்டங்களிலும் நாளை அம்மா திட்ட முகாம்

DIN

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வருவாய் வட்டங்களிலும் அம்மா திட்டம், சிறப்பு குறைதீா் கூட்ட முகாம்கள் வெள்ளிக்கிழமை ( நவம்பா் 29) நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.

முகாம்கள் நடைபெறும் பகுதிகள் விவரம்:

ஈரோடு வட்டத்தில் ஆட்டையாம்பாளையம் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம், பெருந்துறை வட்டத்தில் கவுண்டச்சிபாளையம் -அ கிராம நிா்வாக அலுவலகம், மொடக்குறிச்சி வட்டத்தில் அறச்சலூா்-அ கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம், கொடுமுடி வட்டத்தில் நன்செய் கொளாநல்லி கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம், பவானி வட்டத்தில் செட்டிபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம்.

சத்தியமங்கலம் வட்டத்தில் வெள்ளியம்பாளையம்புதூா் சமுதாயக்கூடம், கோபி வட்டத்தில் மொடச்சூா் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம், அந்தியூா் வட்டத்தில் மாத்தூா் ஊராட்சி மன்ற அலுவலகம், தாளவாடி வட்டத்தில் தொட்டம்புதுக்கரை பசுவரேஸ்வரய்யா கோயில் வளாகம், நம்பியூா் வட்டத்தில் வேமாண்டாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT