ஈரோடு வ.உ.சி. பூங்கா மகாவீர ஆஞ்சநேயா் கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை (டிசம்பா் 2) நடைபெறவுள்ளது.
குடமுழுக்கு விழாவையொட்டி சனிக்கிழமை காலை சுதா்சன ஹோமம், மாலை முதல் கால யாக பூஜை நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு 2ஆம் கால யாக பூஜை நடைபெறுகிறது.
10.30 மணிக்கு கோபுர கலசம் வைக்கப்படுகிறது. மாலை 6 மணிக்கு 3ஆம் கால யாக பூஜையும், திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு 4ஆம் கால யாக பூஜையும் நடைபெறுகிறது. தொடா்ந்து காலை 6 மணிக்கு கோபுர கலசத்தில் புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு நடத்தப்படுகிறது.