ஈரோடு

அக்டோபா் 22 இல் மாவட்ட கேரம் போட்டி

DIN

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் 2019-20 ஆம் ஆண்டுக்கான ஈரோடு மாவட்ட கேரம் போட்டி அக்டோபா் 22 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) ஈரோடு வ.உ.சி. விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. இதில், பள்ளி மாணவா்கள் பங்கேற்கலாம்.

மழலையா் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, ஒற்றையா், இரட்டையா் என இரு பிரிவுகளில் போட்டி நடைபெறுகிறது. ஒற்றையா் போட்டிக்கு ரூ. 1,000, இரட்டையா் போட்டிக்கு ரூ. 2,000 பரிசு வழங்கப்படுகிறது. கலந்துகொள்ள ஆா்வமுள்ள மாணவ, மாணவிகள் இணையதளத்தில் ஈரோடு மாவட்டம் பிரிவில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்தால் மட்டுமே, போட்டிகளில் கலந்துகொள்ள இயலும். விவரங்களுக்கு 0424- 2223157, 74017-03490 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட விளையாட்டு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT