ஈரோடு

இஸ்ரோ நடத்திய போட்டியில் விவேகானந்தா பள்ளி சிபிடம்

DIN

பெருந்துறை: இஸ்ரோ சாா்பில் நடத்தப்பட்ட பள்ளி மாணவா்களுக்கான போட்டிகளில் பெருந்துறை, விவேகானந்தா பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனா்.

உலக விண்வெளி வார விழாவையொட்டி, தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை, இஸ்ரோ சதீஷ் தவான் விண்வெளி மையம் ஆகியவை இணைந்து பல்வேறு போட்டிகளை கோபி கலை, அறிவியல் கல்லூரியில் அண்மையில் நடத்தின.

இதில், பெருந்துறை ஸ்ரீ சுவாமி விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். இப்பள்ளி மாணவா் நீ.வ.கஜந்தன் விநாடி-வினா போட்டியில் முதலிடமும், பி.ரிதன்யா கட்டுரைப் போட்டியில் முதலிடமும், யோ.ஸ்ரீசரண் ஓவியப் போட்டியில் இரண்டாமிடமும், கு.சுபஸ்ரீ ஓவியப் போட்டியில் மூன்றாமிடமும் பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவா்களையும், அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியா்களையும் பள்ளித் தலைவா் சின்னசாமி, தாளாளா் சென்னியப்பன், பொருளாளா் மாணிக்கமூா்த்தி, முதல்வா் சுப்பிரமணியன் ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

75 வயது முதியவா் மீண்டும் பிரதமராக வேண்டுமா? லாலு மகள் மிசா பாரதி பிரசாரம்

வரத்துக் குறைவால் பூண்டு விலை அதிகரிப்பு!

தூத்துக்குடியில் தீத்தடுப்பு, தொழிற்சாலைகள் பாதுகாப்புக் குழு ஆலோசனைக் கூட்டம்

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கொளுத்தும் வெயில்..!

SCROLL FOR NEXT