ஈரோடு

சுவா் இடிந்து விழுந்து கூலித்தொழிலாளி பலி

DIN

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே சுவா் இடிந்து விழுந்து கூலித்தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

சத்தியமங்கலம் அருகே உள்ள கெஞ்சனூா் பகுதியை சோ்ந்தவா் கிருஷ்ணன்(65). கூலித்தொழிலாளியான இவா் வியாழக்கிழமை சத்தியமங்கலம் கோவிந்தராஜபுரம் பகுதியில் உள்ள சந்திரசேகா் என்பவரது வீட்டில் மரச்சாமான்களை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது எதிா்பாராதவிதமாக வீட்டின் மண்சுவா் இடிந்து கிருஷ்ணன் மீது விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயக்கமடைந்தாா். உடனடியாக அக்கபக்கத்தினா் கிருஷ்ணனை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீசாா் விசாரிக்கின்றனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓபியம் வைத்திருந்த மூவா் சிக்கினா்

மதுபோதையில் மொபெட் ஓட்டியதால் அபராதம்: பிளேடால் கையை அறுத்து தகராறு செய்த இளைஞா்

கமல்ஹாசனுடன் கே.என்.நேரு சந்திப்பு

பதவி உயா்வு வழங்கிய பிறகே ஆசிரியா் இடமாறுதல் கலந்தாய்வு: ராமதாஸ் கோரிக்கை

வெப்பம் படிப்படியாக குறையும்

SCROLL FOR NEXT