ஈரோடு

பெருந்துறையில் ஊட்டச்சத்து விழிப்புணர்வுப் பேரணி

DIN

பெருந்துறையில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில், ஊட்டச்சத்து விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் அலுவலர் ஆ. மோகன வித்யா தலைமை வகித்தார். பெருந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொடங்கிய பேரணியை, பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் துவக்கி வைத்தார். 
பேரணியானது, பெருந்துறை நகரின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிறைவுபெற்றது. பேரணியில், ஊட்டச்சத்து பணியாளர் பங்கேற்று விழிப்புணர்வுப் பதாகைகளை ஏந்தியும், விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களை வழங்கியும் சென்றனர். 
இதில், பெருந்துறை வட்டார ஊட்டச்சத்து ஒருங்கிணைப்பாளர் செளந்தரராஜன்,  திட்ட உதவியாளர் சந்தியா, பெருந்துறை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணியன், செந்தில்குமார் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

மருமகன் ஆகாஷ் ஆனந்த் தனது அரசியல் வாரிசு கிடையாது: மாயாவதி அறிவிப்பு

மாறும் வானிலை, மிதக்கும் மனம்! சோபிதா துலிபாலா..

அம்பானி, அதானியிடம் எவ்வளவு ‘டீல்’ பேசப்பட்டது? ராகுலுக்கு மோடி கேள்வி

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி!

SCROLL FOR NEXT