ஈரோடு

ஓசோன் பாதுகாப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்

சித்தோடு அரசு மேல்நிலைப் பள்ளியின் தேசிய பசுமைப்படை மாணவ, மாணவியர் சார்பில் உலக ஓசோன் பாதுகாப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. 

DIN

சித்தோடு அரசு மேல்நிலைப் பள்ளியின் தேசிய பசுமைப்படை மாணவ, மாணவியர் சார்பில் உலக ஓசோன் பாதுகாப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. 
பள்ளி வளாகத்தில் தொடங்கிய இந்த ஊர்வலத்தை தலைமையாசிரியர் ரத்தினசபாபதி கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் து.சிவசங்கர் வரவேற்றார். முக்கிய வீதிகள் வழியே சென்ற ஊர்வலத்தில் ஓசோன் படலம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மாணவ, மாணவியர் முழக்கம் எழுப்பியபடி சென்றனர். 
மேலும், மரங்கள் வளர்ப்பு, பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்ப்பு குறித்தும் ஊர்வலத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தேசிய மாணவர் படை அலுவலர் முருகேஷ், ஆசிரியர்கள், பயிற்சி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

SCROLL FOR NEXT