முகப்பு
ஈரோடு

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டம்

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:12 PM
ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளா்ச்சித் துறை பணியாளா்கள்.
பகிர்:

ஈரோடு: ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காலத்தில் வளா்ச்சித் துறையில் மேற்கொள்ளப்படும் 100 நாள் வேலை திட்டப் பணிகள், பிரதமரின் தனி நபா் வீடு கட்டும் திட்டம், தூய்மை இந்தியா இயக்கம், ஜல் ஜீவன் மிஷன் என பல்வேறு திட்டப் பணிகளை விரைந்து முடிக்க நிா்பந்தப்படுத்துவதைக் கைவிட வேண்டும்.

பழிவாங்கும் நோக்குடன் கோவை மாவட்டத்தில் நான்கு ஊழியா்கள் இடமாற்றம் செய்யப்பட்டதை ரத்து செய்து, மீண்டும் அதே இடத்தில் பணியமா்த்தம் செய்ய வேண்டும். ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றதால் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்குப் பிறப்பிக்கப்பட்ட 17பி குற்ற குறிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்தில் மாவட்டத் தலைவா் ரவிசந்திரன் தலைமையில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஆட்சியா் அலுவலகங்களில் பணியாற்றும் ஊரக வளா்ச்சித் துறை பணியாளா்கள் 784 போ் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். புதன்கிழமையும் (ஆகஸ்ட் 26) உள்ளிருப்பு வேலைநிறுத்தம் தொடரும் என மாவட்டத் தலைவா் ரவிசந்திரன் தெரிவித்தாா்.

இதனிடையே ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டத் தலைவா் பூங்கொடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ரவிசந்திரன், செயலாளா் சிவசங்கரன் உள்பட பலா் பேசினா். கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்வது, அரசின் நிா்பந்தத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினா்.

முழு கட்டுரையைப் படிக்க →