ஈரோடு

விவசாய நிலங்களில் சாய ஆலைகள்: அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் எச்சரிக்கை

DIN

விவசாய நிலங்களில் சாய ஆலைகள் நடத்தினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழகச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்து கவுந்தப்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பயனாளிகளுக்கு ரூ.12 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் நீர்நிலைகளில் சாயக்கழிவு நீரை கலப்பது குற்றம். ஆற்றில் மட்டுமல்லாமல், விவசாய நிலங்களிலும் சாயத் தொழிற்சாலையை சட்டவிரோதமாக நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.” என எச்சரித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “ இயற்கையின் கொடையான நீராதாரங்கள் பாதிக்கும் வகையில் சாயக்கழிவு நீரை வெளியேற்றுவோர் மீது குற்றவியல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT