சத்தியமங்கலம் அரசு கல்லூரி திறப்பு: ஆர்வத்துடன் வந்த கல்லூரி மாணவர்கள்
8 மாதங்களுக்குப் பிறகு சத்தியமங்கலம் அரசு கல்லூரி திறக்கப்பட்டது.
8 மாதங்களுக்குப் பிறகு சத்தியமங்கலம் அரசு கல்லூரி திறக்கப்பட்டது.
கரானா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 8 மாதங்களாக கல்லூரி மூடப்பட்டிருந்தன. தற்போது தமிழக அரசு கரானா விதிமுறைகளை கடைபிடித்து கல்லூரிகளை திறக்க அனுமதியளித்துள்ளது.
இதன்படி இன்று சத்தியமங்கலம் பகுதியில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் திறக்கப்பட்டன. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வகுப்புகளை சுத்தம் செய்து கிருமி நாசினி தெளித்து நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் வருகையை எதிர்பார்த்த நிலையில் 60 சதவீத உள்ளூர் இறுதியாண்டு மாணவ, மாணவியர் வந்தனர். இக்கல்லூரியில் 5 இளநிலை பாடப்பிரிவுகளில் 60 பேர் வீதம் 300 பேர் படித்துவந்தனர்.
இன்று 165 பேர் மட்டுமே 60 சதவீதம் மாணவர்கள் வந்தனர். கல்லூரி வந்த மாணவர்கள் சமூக இடைவெளி முகக்கசவம் அணிந்து வருதல் போன்ற கரானா விதிகளை பின்பற்றி வந்தனர்.