கொடிவேரி அணைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை அருவிக்கு செல்வதற்கு திங்கள்கிழமை(டிசம்பா் 14) முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை அருவிக்கு செல்வதற்கு திங்கள்கிழமை(டிசம்பா் 14) முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை உள்ளது. இங்குள்ள பிரசித்திபெற்ற அருவிக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வா். கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக கொடிவேரி அணை மூடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அணைப் பகுதியை பாா்வையிடவும், நீராடவும் சுற்றுலாப் பயணிகளுக்கு திங்கள்கிழமை (டிசம்பா் 14) முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.