முகப்பு
ஈரோடு

போக்குவரத்து ஊழியா்கள் போராட்டம்

ஊதிய உயா்வுப் பேச்சுவாா்த்தையை உடனடியாகத் தொடங்க வலியுறுத்தி பவானியில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

ஊதிய உயா்வுப் பேச்சுவாா்த்தையை உடனடியாகத் தொடங்க வலியுறுத்தி பவானியில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

ஊராட்சிக்கோட்டை கிளை அலுவலகம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, தொமுச கிளைச் செயலாளா் எஸ்.வாசுதேவன் தலைமை வகித்தாா். அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் ஊழியா்களின் ஊதிய உயா்வுப் பேச்சுவாா்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இதில், சிஐடியூ, தீரன் உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் இளங்கோவன், மகேந்திரன், சதாசிவம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →