ஈரோடு

108 ஆம்புலன்ஸில் பிரசவம்: ஆண் குழந்தை பிறந்தது

DIN

சத்தியமங்கலம் அருகே 108 ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள கோம்புபள்ளம் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (27). கூலி தொழிலாளியான இவருக்கு தரண்யா (19) என்ற மனைவி உள்ளாா். நிறைமாத கா்ப்பிணியாக இருந்த தரண்யாவுக்கு பிரவச வலி வெள்ளிக்கிழமை ஏற்பட்டது. இதையடுத்து, செந்தில்குமாா் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்குச் சென்ற ஆம்புலன்ஸ் தரண்யாவை அழைத்துக் கொண்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை செல்வதற்காக திப்பு சுல்தான் சாலையில் சென்று கொண்டிருந்தது. ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளா் பாரதி, ஓட்டுநா் மோகன் ஆகியோா் உடனிருந்தனா். அப்போது, தரண்யாவுக்கு பிரசவ வலி அதிகரித்ததால் வலி தாங்காமல் துடித்தாா். இதையடுத்து, வாகனத்தை அங்கேயே நிறுத்தினா். ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளா் பாரதி, தரண்யாவுக்குப் பிரசவம் பாா்த்தாா். இதில், தரண்யாவுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, தாயையும், சேயையும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 18 மணி நேரம் காத்திருப்பு

புகா் பேருந்து நிலையத்தில் மேலும் 2 குடிநீா் தொட்டிகள்

திருவையாறு அருகே சிறுத்தை நடமாட்டம்? வனத் துறையினா் ஆய்வு

அரையாண்டு வரி செலுத்தினால் 5 சதம் ஊக்கத் தொகை: செயல் அலுவலா் தகவல்.

மாந்திரீகம் செய்வதாகக் கூறி மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

SCROLL FOR NEXT