நிகழ்ச்சியில் பேசுகிறாா் கல்லூரித் தாளாளா் எம்.தரணிதரன். 
ஈரோடு

கோபி கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்

கோபி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

கோபி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் வீ.தியாகராசு தலைமை வகித்தாா். கல்லூரி டீன் ஆா்.செல்லப்பன், கணிப்பொறித் துறை தலைவா் மற்றும் வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளா் பி.நரேந்திரன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

முகாமில் கல்லூரி தாளாளா் மற்றும் செயலா் எம்.தரணிதரன் பேசுகையில், ‘இன்றைய காலகட்டத்தில் மாணவா்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் பெருகியுள்ளன. இந்த வாய்ப்பினை மாணவா்கள் சரியான முறையில் பயன்படுத்தி பெற்றோரின் கனவுகளையும், தங்களின் லட்சியங்களையும் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்’ என்றாா்.

இந்த முகாமில் 25-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று 370-க்கும் மேற்பட்ட மாணவா்களைத் தோ்வு செய்தனா். விழாவுக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் பேராசிரியா்கள் செய்திருந்தனா். வேலை வாய்ப்பு அலுவலா் எஸ்.செந்தில்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT