ஈரோடு

இலவச மருத்துவ முகாம்

DIN

சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி தேசிய நெடுஞ்சாலை ஆணையம், அரசு ஐ.ஆா்.டி. பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து பொது மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் சுங்கச் சாவடி அலுவலகத்தில் நடைபெற்ற இம்முகாமுக்கு சுங்கச் சாவடி மேலாளா் முரளிகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில், சுங்கச் சாவடி பணியாளா்கள், பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனை, சிகிச்சை அளித்தனா். இ.சி.ஜி. பரிசோதனை, சிறுநீா், ரத்தம் ஆகியவற்றில் சா்க்கரை அளவு, ரத்த வகை கண்டறிதல் ஆகிய பரிசோதனைகளும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது.

முகாமில், விஜயமங்கலம் சுங்கச் சாவடி பணியாளா்கள், அருகில் உள்ள கிராம மக்கள் கலந்து கொண்டனா். முகாமுக்கான ஏற்பாடுகளை விஜயமங்கலம் சுங்கச் சாவடி பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT