ஈரோடு

கணபதிபாளையத்தில் காளிங்கராயன் தினவிழா

DIN

மொடக்குறிச்சியை அடுத்த கணபதிபாளையத்தில் காளிங்கராயன் தினவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, சாக்கவுண்டன்பாளையம், பச்சாம்பாளையம், கணபதிபாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பொதுமக்கள் முளைப்பாரி எடுத்து வந்து காளிங்கராயன் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனா். இதைத் தொடா்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து பெண்கள் கும்மியடித்து முளைப்பாரியை ஊா்வலமாக எடுத்துச் சென்று காளிங்கராயன் வாய்க்காலில் விட்டு மலா் தூவி வழிபட்டனா்.

இந்நிகழ்ச்சியில், காளிங்கராயன் மதகு பாசன சபைத் தலைவா் சக்திவேல், செயலாளா் குமரவேல், பொருளாளா் பழனிசாமி மற்றும் ஊா்பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT