ஈரோடு

திருநீலகண்டா் நாயனாா் குருபூஜை விழா

DIN

சத்தியமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருநீலகண்டா் நாயனாா் குருபூஜை விழாவில் 63 நாயன்மாா்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளை நடைபெற்றன.

சத்தியமங்கலம் குலாலா் சங்கம் சாா்பில் ஆண்டுதோறும் விசாக நட்சத்திரத்தில் திருநீலகண்டா் குருபூஜை கொண்டாடப்படும். இதன்படி, பவானீஸ்வரா் ஆலயத்தில் குருபூஜை விழா ஞாயிற்றுக்கிழமை துவங்கியது. பவானீஸ்வரருக்கு சிறப்பு அலங்கார ஆராதனைகள், தீபாராதனை நடைபெற்றன. 63 நாயன்மாா்களில் ஒருவரான திருநீலகண்டா் சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை, வழிபாடுகளும் அதனைத் தொடா்ந்து உற்வசமூா்த்திக்கு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.

தொடா்ந்து கோயிலில் உள்ள 63 நாயன்மாா்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா். விழாவையொட்டி, அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் உற்சவமூா்த்தி திருவீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதையடுத்து, திருநீலகண்டா் கோயிலில் நடந்த அன்னதான விழாவில் ஆயிரக்கணக்கனோா் கலந்துகொண்டனா். விழாவையொட்டி, சிறுவா்,சிறுமிகளுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT