முகப்பு
ஈரோடு

பெண் தற்கொலை வழக்கில் இளைஞா் கைது

தாளவாடி அருகே இளம்பெண்ணை தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் பக்கத்து வீட்டு இளைஞா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

Updated On : 3 நவம்பர், 2020 at 12:57 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:17 PM

தாளவாடி அருகே இளம்பெண்ணை தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் பக்கத்து வீட்டு இளைஞா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடியை அடுத்த முதியனூரைச் சோ்ந்தவா் சிவன்னா. இவரது மனைவி குமாரி (27). அதே பகுதியைச் சோ்ந்த தினேஷ் (25) என்பவருடன் குமாரிக்கு திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. கணவரைப் பிரிந்து சென்ற குமாரி, கடந்த 6 மாதங்களாக தினேஷுடன் வாழ்ந்து வந்துள்ளாா். சில நாள்களுக்கு முன்பு உறவினா்கள் குமாரியிடம் கணவருடன் சோ்ந்து வாழ அறிவுறுத்தினா். இதையடுத்து அவா், கணவா் சிவன்னா வீட்டுக்கு வந்துள்ளாா். இந்நிலையில் தினேஷ் அங்கு வந்து குமாரியிடம் தகராறு செய்துள்ளாா். இதனால் மனமுடைந்த குமாரி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது தொடா்பாக குமாரியை தற்கொலைக்குத் தூண்டியதாக தினேஷை கைது செய்ய வேண்டும் என குமாரியின் உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் டிஎஸ்பி சுப்பையா அவா்களை சமாதானப்படுத்தினா். இந்நிலையில், தினேஷ் மீது வழக்கு ப் பதிவுசெய்து தேடி வந்த நிலையில் அவரை தாளவாடி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.