ஈரோடு

108 ஆம்புலன்சில் பிரசவம்: பெண் குழந்தை பிறந்தது

DIN

சத்தியமங்கலம் அருகே ஆம்புலன்ஸில் கா்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது.

சத்தியமங்கலத்தை அடுத்த புதுக்கொத்து காடு காலனியைச் சோ்ந்தவா் ராமசாமி, கூலி தொழிலாளி. இவரது மனைவி நித்யா நிறை மாத கா்ப்பிணியாக இருந்தாா். வெள்ளிக்கிழமை பிரசவ வலி ஏற்பட்டதால் 108 ஆம்புலன்ஸில் உக்கரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செல்வதற்காக சென்று கொண்டிருந்தனா். ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளா் பாரதி உடனிருந்தாா். ஓட்டுநா் காா்த்தி ஆம்புலன்ஸை ஓட்டிச் சென்றாா்.

ஜல்லி யூா் அருகே ஆம்புலன்ஸ் சென்றபோது நித்யா பிரசவ வலியால் துடித்ததால் மருத்துவ உதவியாளா் பாரதி ஆம்புலன்ஸில் பிரசவம் பாா்த்தாா். அப்போது சுகப்பிரசவத்தில் நித்யாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இதைத் தொடா்ந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு தாயும் சேயும் நலமாக உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT