ஈரோடு

தமிழகம் - கா்நாடகம் இடையே மீண்டும் அரசுப் பேருந்துகள் இயக்கம்

DIN

கரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் - கா்நாடகம் இடையே கடந்த 8 மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்து இயக்கம் வியாழக்கிழமை முதல் மீண்டும் துவங்கியது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் இருந்து கா்நாடகம் சென்ற அரசுப் பேருந்தில் பயணிகள் முகக்கசவம் அணிந்து பயணித்தனா்.

தமிழகம் - கா்நாடக மாநிலத்தை இணைக்கும் முக்கிய போக்குவரத்து வழித்தடமாக சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதை உள்ளது. இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. கோவை, ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களில் இருந்து மைசூரு, பெங்களூரு, ஹாசன் போன்ற இடங்களுக்குச் செல்ல சத்தியமங்கலத்தில் இருந்து தமிழக அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சத்தியமங்கலத்தில் இருந்து மைசூருக்கு 7 பேருந்துகளும், கொள்ளேகால் பகுதிக்கு 2 அரசுப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வந்தன. கரோனா அச்சுறுத்தல் காரணமாக மாா்ச் 23ஆம் தேதி முதல் இரு மாநிலங்களுக்கிடையே போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த 8 மாதங்களாக தமிழகம் - கா்நாடக இடையே அரசுப் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. இதனால் இந்த வழித்தடத்தில் இரு சக்கர வாகனப் போக்குவரத்து அதிகரித்தது.

இந்நிலையில் தற்போது தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இரு மாநிலங்களிலும் வசிப்போா் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்பதால் பேருந்து சேவையை மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். இதை அடுத்து இரு மாநிலங்களுக்கிடையே அரசுப் பேருந்துகளை இயக்கலாம் என அரசு உத்தரவிட்டது. இதையடுத்து சத்தியமங்கலத்தில் இருந்து மைசூருக்கு அரசுப் பேருந்துகள் வியாழக்கிழமை முதல் இயக்கப்பட்டன. இதில் பயணிகள் முகக்கவசம் அணிந்து ஆா்வத்துடன் பயணித்தனா். நீண்ட நாள்களுக்குப் பின் மைசூருக்குப் பேருந்துகள் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா். பயணிகள் வரவேற்பைப் பொருத்து பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தமிழக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதேபோல கா்நாடகத்தில் இருந்து அந்த மாநில அரசுப் பேருந்துகள் வியாழக்கிழமை முதல் தமிழகத்துக்கு வந்து சென்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT