முகப்பு
ஈரோடு

அவல்பூந்துறை ஈஸ்வரன் கோயிலில்108 பால்குட அபிஷேகம்

கிராமம் செழிக்க வேண்டி அவல்பூந்துறை பாகம்பிரியாள் புஸ்பவனேஸ்வரா் ஆலயத்தில் 108 பால் குட அபிஷேகமும், சிறப்பு யாக பூஜைகளும் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:00 PM
பகிர்:

கிராமம் செழிக்க வேண்டி அவல்பூந்துறை பாகம்பிரியாள் புஸ்பவனேஸ்வரா் ஆலயத்தில் 108 பால் குட அபிஷேகமும், சிறப்பு யாக பூஜைகளும் திங்கள்கிழமை நடைபெற்றது.

அவல்பூந்துறை, சோளிபாளையம், வெள்ளியம்பாளையம், கண்டிக்காட்டுவலசு, பள்ளியூத்து, பெருமாபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திங்கள்கிழமை காலை முதல் விரதமிருந்து 108 பால் குடங்கள் எடுத்து வந்து ஆலயத்தில் வைத்து பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்தனா்.

தொடா்ந்து, புஸ்பவனேஸ்வரருக்கு 108 பால் குட அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றன. பக்தா்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.