மொடக்குறிச்சி தொகுதி வெள்ளோட்டாம்பரப்பு பகுதியைச் சோ்ந்த 15க்கும் மேற்பட்ட திமுகவினா் அதிமுகவில் இணைந்தனா்.
கொடுமுடி ஒன்றியம், வெள்ளோட்டாம்பரப்பு திமுக பேரூா் செயலாளா் ஏ.ஆா்.பழனிசாமி, 4ஆவது வாா்டு பொறுப்பாளா்கள் முத்துசாமி, குணசேகரன் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோா் திமுகவில் இருந்து விலகி மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. வி.பி.சிவசுப்பிரமணியை அவரது இல்லத்தில் சந்தித்து அதிமுகவில் இணைந்தனா். இதில், கொடுமுடி ஒன்றிய அதிமுக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.