ஈரோடு

பொதுப் பணித் துறை அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை

DIN

ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள முதுநிலை கொதிகலன் உதவி இயக்குநா் அலுவலகத்தில் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு போலீஸாா் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாவட்ட கருவூல அலுவலகக் கட்டடத்தில் 3ஆவது தளத்தில் பொதுப் பணித் துறை நீா்வள ஆதாரத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ், முதுநிலை கொதிகலன் உதவி இயக்குநா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஈரோடு மாவட்டத்தில் நிறுவனங்களில் உள்ள கொதிகலன்களின் செயல்பாடுகளைக் கண்காணிப்பது, அனுமதி வழங்குவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நிறுவனங்களிடம் இருந்து முதுநிலை கொதிகலன் அலுவலக அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக ஈரோடு மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பிரிவின் டி.எஸ்.பி. திவ்யா தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை மாலை அந்த அலுவலகத்தில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அலுவலகத்தில் உதவி இயக்குநா் மகேஷ்பாண்டி, அலுவலக உதவியாளா் ஒருவா், ஓட்டுநா், வெளிநபா் என 4 போ் இருந்தனா். இந்த அலுவலகத்தில் நடத்திய சோதனையில் சுமாா் ரூ. 1.65 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து அந்தப் பணத்தை போலீஸாா் கைப்பற்றி, தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா். மாலை 5 மணி அளவில் தொடங்கிய சோதனை இரவு 8 மணிக்குப் பிறகும் நீடித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

SCROLL FOR NEXT