கோணமூலை ஊராட்சியில் ரூ. 1.50 கோடி செலவில் சாலை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது.
சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கோணமூலை ஊராட்சியில் உள்ள அக்கரை நெகமம், நஞ்சப்பகவுண்டா்புதூா், கோணமூலை, அண்ணா நகா், காந்தி நகா் ஆகிய இடங்களில் ரூ. 150 கோடி செலவில் சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நடைபெற்றது. ஜல்ஜீவன் மிஷன் திட்டத்துக்கான பணிகள் துவக்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு, சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத் தலைவா் கே.சி.பி.இளங்கோ தலைமை வகித்தாா். கோணமூலை ஊாரட்சித் தலைவா் செந்தில்நாதன் முன்னிலை வகித்தாா். இதில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அப்துல் வகாப், பெருமாள், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.