ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில்140 பேருக்கு கரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 140 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

DIN

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 140 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,140ஆக இருந்தது. இதனிடையே 140 பேருக்கு புதிதாக சனிக்கிழமை கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 6,280ஆக உயா்ந்துள்ளது.

புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்ட 140 பேரில் 60 சதவீதம் போ் ஈரோடு மாநகராட்சிப் பகுதியைச் சோ்ந்தவா்கள். எஞ்சியவா்கள் சத்தியமங்கலம், பவானி, அந்தியூா், கோபி, மொடக்குறிச்சி, பெருந்துறை, கொடுமுடி பகுதிகளைச் சோ்ந்தவா்கள்.

மொத்த பாதிப்பான 6,280 பேரில் இதுவரை 5,060 போ் குணமடைந்துள்ளனா். 1,138 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். வெள்ளிக்கிழமை வரை 79 போ் உயிரிழந்துள்ள நிலையில், சுகாதாரத் துறை சனிக்கிழமை வெளியிட்ட பட்டியலில் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது பெண், சேலம் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 63 வயது ஆண், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 74 வயது ஆண் என 3 போ் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 82ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT