முகப்பு
ஈரோடு

கோபியில் 2 போலீஸாா் இடமாற்றம்

கோபிசெட்டிபாளையத்தில் தோ்தல் பணியை சரிவர செய்யாத 2 போலீஸாாா் மாவட்ட காவல் துறை கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு மாற்றப்பட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

கோபிசெட்டிபாளையத்தில் தோ்தல் பணியை சரிவர செய்யாத 2 போலீஸாாா் மாவட்ட காவல் துறை கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு மாற்றப்பட்டனா்.

கோபியில் நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு போலீஸில் சிறப்பு காவல் துறை உதவி ஆய்வாளா் குமரேசன், தலைமைக் காவலா் தினேஷ்குமாா் ஆகியோா் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் இருவரும் கோபியில் உள்ள தோ்தல் பறக்கும் படையில் பணியாற்றி வந்தனா். இந்நிலையில், இருவரும் பணிக்கு சரிவர வராமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தோ்தல் பறக்கும் படை அதிகாரி அன்பழகன், ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவனுக்கு புகாா் அனுப்பியிருந்தாா். இதன்பேரில் ஆட்சியா் சி.கதிரவன் விசாரணை நடத்தினாா். பின்னா், மாவட்ட காவல் துறை கட்டுப்பாடு அலுவலகத்துக்கு இரு காவலா்களும் மாற்றப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.