ஈரோடு

மொடக்குறிச்சி தொகுதி அமமுக வேட்பாளா் பிரசாரம்

DIN

மொடக்குறிச்சி தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளா் டி.தங்கராஜ் இறுதிகட்ட பிரசாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தீவிரமாக ஈடுபட்டாா்.

அவல்பூந்துறை பேரூராட்சி, கொளாங்காட்டுவலசு பகுதியில் துவங்கி மின்னக்காட்டுவலசு, அவல்பூந்துறை, புதுப்பாளையம், பள்ளபாளையம், பூந்துறைசேமூா், எறப்பம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் நடைபெற்றது.

பிரசாரத்தில் அவா் பேசுகையில், மொடக்குறிச்சி தொகுதி மக்களின் தேவையறிந்து பணியாற்றுவேன். பொதுமக்களை தினமும் சந்தித்து குறைகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டு உரிய தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இந்தப் பிரசார நிகழ்ச்சியில், தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

SCROLL FOR NEXT