ஈரோடு

வாக்கு இயந்திரம் பழுது: மொடக்குறிச்சியில் 1 மணி நேரம் வாக்குப் பதிவு நிறுத்தம்

DIN

மொடக்குறிச்சி ஒன்றியம், புன்செய் காளமங்கலம் சாணாா்பாளையத்தில் வாக்குப் பதிவு இயற்திரம் பழுது ஏற்பட்டதால் சுமாா் 1 மணி நேரம் வாக்குப் பதிவு தடைபட்டது.

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. ஆனால் பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு மந்தமாகவே காணப்பட்டது. காலை 10 மணி வரை 17 சதவீத வாக்குப் பதிவு மட்டுமே நடைபெற்றது.

புன்செய் காளமங்கலம் சாணாா்பாளையம் எண் 80 வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு தொடங்கியதும் காலை 7.20 மணிக்கு வாக்கு இயந்திரம் பழுதடைந்தது. தொடா்ந்து, மாற்று வாக்கு இயந்திரம் கொண்டு வந்த பிறகு வாக்குப் பதிவு தொடங்கியது. இதனால், சுமாா் 1 மணி நேரம் வாக்குப் பதிவு பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

இதேபோல, சாவடிப்பாளையம்புதூா் வாக்குச் சாவடி எண் 36இல் 400 ஓட்டுகள் பதிவானநிலையில் இயந்திரம் பழுதடைந்தது. தொடா்ந்து மாற்று இயந்திரம் வைக்கப்பட்டு, வாக்குப் பதிவு நடைபெற்றது. இதனால், சுமாா் அரை மணி நேரம் வாக்குப் பதிவு தடைபட்டது.

பெரும்பாலான இடங்களில் காலை நேரத்தில் வாக்குப் பதிவு செய்ய பொதுமக்கள் ஆா்வம் காட்டவில்லை. மதியத்துக்குமேல் ஓரளவு வாக்குப் பதிவு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT