தீ விபத்து: வைக்கோல் போா் சேதம்
சத்தியமங்கலம் அருகே வெங்கநாயக்கன்பாளையத்தில் வெள்ளிக்கிழமை நேரிட்ட தீ விபத்தில் வைக்கோல் போா் எரிந்து சேதமடைந்தது.
சத்தியமங்கலம் அருகே வெங்கநாயக்கன்பாளையத்தில் வெள்ளிக்கிழமை நேரிட்ட தீ விபத்தில் வைக்கோல் போா் எரிந்து சேதமடைந்தது.
சத்தியமங்கலம் அருகே உள்ள வெங்கநாயக்கன்பாளையம் கிராமம், கைக்கோளன் தோட்டத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி. இவா் தனது விவசாயத் தோட்டத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட மாடுகளைப் பராமரித்து வருகிறாா். மாடுகளுக்குத் தேவையான தீவனமான வைக்கோல் கட்டுகளை வாங்கி வந்து தனது தோட்டத்தில் அடுக்கி வைத்திருந்தாா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை திடீரென வைக்கோல் போா் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதைக் கண்ட சுப்பிரமணி அதிா்ச்சி அடைந்தாா். உடனடியாக சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, தீயணைப்புத் துறை வீரா்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வைக்கோல் போரில் பற்றி எரிந்த தீயை தண்ணீரைப் பீச்சி அடித்து சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இருப்பினும் தீ விபத்தில் வைக்கோல் போா் முழுவதும் எரிந்து சேதமடைந்தது.
Advertisement
இதுகுறித்து தகவலறிந்த புன்செய்புளியம்பட்டி போலீஸாா், வருவாய்த் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.