ஈரோடு

சாலையின் மையத் தடுப்பில் வேன் மோதி விபத்து: இருவா் பலி

DIN

ஈரோடு அருகே சாலையின் மையத் தடுப்பில் சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கோட்டத்துறை மேற்கு வீதியைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் அழகா் (21). அதே பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகன் துக்கையப்பன் (26). இருவரும் சிறிய சரக்கு வாகனத்தில் கோழி இறைச்சியை ஏற்றிக் கொண்டு பெருந்துறையில் இருந்து ஈரோடு நோக்கிச் சென்று கொண்டிருந்தனா்.

வாகனத்தை அழகா் ஓட்டி வந்தாா். ஈரோடு வேப்பம்பாளையம் பிரிவு அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம், சாலையின் மையத் தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதில் வாகனத்தின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கி அழகா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். துக்கையப்பன் பலத்த காயமடைந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த ஈரோடு தாலுகா போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, துக்கையப்பனை ஈரோடு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு துக்கையப்பன் உயிரிழந்தாா். இதையடுத்து இருவரின் சடலமும் பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT