பெருந்துறையில் தனிப்பிரிவு போலீஸாா் இடமாற்றம்
பெருந்துறை மற்றும் காஞ்சிக்கோவில் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த தனிப்பிரிவு போலீஸாா் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
பெருந்துறை மற்றும் காஞ்சிக்கோவில் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த தனிப்பிரிவு போலீஸாா் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
பெருந்துறை காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராகப் பணிபுரிந்து வந்த கோபால், காஞ்சிக்கோவில் காவல் நிலையத்துக்கும்,
காஞ்சிக்கோவிலில் பணிபுரிந்து வந்த செந்தில், சென்னிமலை காவல் நிலையத்துக்கும், சென்னிமலையில் பணிபுரிந்து வந்த கமலகண்ணன், வெள்ளோடு காவல் நிலையத்துக்கும், வெள்ளோட்டில் பணிபுரிந்து வந்த செல்வசுந்தரம், அரச்சலூா் காவல் நிலையத்துக்கும் புதன்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.