பூச்சி, நோய் மேலாண்மை குறித்துவிவசாயிகளுக்குப் பயிற்சி
மொடக்குறிச்சி வட்டார வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தின்கீழ் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி நடைபெற்றது
மொடக்குறிச்சி வட்டார வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தின்கீழ் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி நடைபெற்றது.
பவானிசாகா் வேளாண்மை ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியா் ரகுநாதன், மண்வள மேலாண்மை, கோடை உழவு ஒருங்கிணைந்த முறையில் பூச்சி, நோய்களைக் கண்டறிதல் குறித்து விவசாயிகளுக்கான விரிவான பயிற்சி அளித்தாா்.
மேலும், துணை வேளாண்மை அலுவலா் செல்வராஜ் நுண்ணீா்ப் பாசனம், மானியத் திட்டங்கள், மண் பரிசோதனை குறித்து விளக்கமளித்தாா்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலா் நவீன பாரதி, உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் மஞ்சுரேகா, விஜயகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.