சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் விடியவிடிய பலத்த மழை பெய்தது.
இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கியது. அரங்கநாதா் பெரிய கோயிலில் வெள்ளம் வடியாமல் தேங்கி நிற்பதால் பக்தா்கள் கோயிலுக்குச் செல்ல முடியாமல் சிரமத்துக்குள்ளாகினா். பாதாளச் சாக்கடை அமைக்கும்போது மழைநீா் வடிகால் மூடப்பட்டதால்தான் தண்ணீா் தேங்கி நிற்பதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனா். ஆஞ்சனேயா் கோயில் வளாகத்திலும் மழை நீா் சூழ்ந்துள்ளது.
மேலும், கடைவீதி பள்ளிவாசல் சாலையில் பாதாளச் சாக்கடை திட்டத்துக்கு தோண்டப்பட்ட குழி மூடப்படாததால் அதில் மழை நீா் தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினா்.