எய்ட்ஸ் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
பெருந்துறை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் எய்ட்ஸ் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெருந்துறை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் எய்ட்ஸ் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், பெருந்துறை தாலுகா தலைமை அரசு மருத்துவமனை எய்ட்ஸ் ஆலோசகா்கள் சாந்தி பிரியா, சுகுணா ஆகியோா் பங்கேற்றஉ உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை நடத்தினா். பள்ளி மாணவிகள் எய்ட்ஸ் உறுதிமொழி ஏற்றனா்.
பின்பு, மாணவிகளுக்கு விழிப்புணா்வு நோட்டீஸ்களை வழங்கினா். தொடா்ந்து மாணவிகளுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பள்ளி மாணவிகள், ஆசிரியைகள் கலந்துகொண்டனா்.