முகப்பு
கிரிக்கெட்

நடப்பு சாம்பியன் பட்டத்தை தக்கவைப்பதற்காக விளையாடவில்லை: ரஜத் படிதார்

ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியன் பட்டத்தை தக்கவைப்பதற்காக விளையாடவில்லை என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் தெரிவித்துள்ளார்.

Updated On : 29 மார்ச் 2026, 4:08 pm IST
ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் - படம் | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (எக்ஸ்)
பகிர்:

ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியன் பட்டத்தை தக்கவைப்பதற்காக விளையாடவில்லை என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் நேற்று (மார்ச் 28) தொடங்கியது. தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாதை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றது முடிந்துபோன விஷயம் எனவும், நடப்பு சாம்பியன் பட்டத்தை தக்கவைக்க வேண்டும் என்பதற்காக விளையாடவில்லை எனவும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் தெரிவித்துள்ளார்.

Advertisement

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றது முடிந்துபோன விஷயம். நாங்கள் நடப்பு சாம்பியன் பட்டத்தை தக்கவைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு விளையாடவில்லை. இந்த சீசனில் ஒரு அணியாக நன்றாக செயல்பட்டு வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் விளையாடுகிறோம். அப்படி விளையாடினால், அடுத்த கோப்பையை வெல்ல அது எங்களுக்கு உதவியாக இருக்கும் என்றார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வருகிற ஏப்ரல் 5 ஆம் தேதி நடைபெறும் அதன் அடுத்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

summary

Royal Challengers Bangalore captain Rajat Patidar has stated that they are not playing in the IPL tournament with the aim of retaining the defending champion title.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.